Sunday 5th of May 2024 03:24:45 PM GMT

LANGUAGE - TAMIL
யாழ்.போதனா வைத்தியசாலை
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறுபேருக்கு கொரோனா இல்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறுபேருக்கு கொரோனா இல்லை!


கொரோனோ தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பத்து பேரில் ஆறு பேரிற்கு கொரோனோ தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனொ தொற்றுச் சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் 39 பேர் கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

அதே நேரம் ஒருவருக்கு மட்டும் கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சந்தேகத்தில் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது யாழ் போதனாவில் பத்துப் பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்ஆறு பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய நால்வருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் நாளை வியாழக்கிழமை வெளிவருமென்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE